மகாராஷ்டிரா முதல்வரின் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு கொரோனா!
Mar 20, 2021, 19:30 IST1616248824000
தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக மகாராஷ்டிரா உள்பட சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவில் குறிப்பாக நாக்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்கு மார்ச் 15 முதல் 21ம் தேதி வரை லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும், அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான ஆதித்யா தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டதாகவும்,அதில் பாசிட்டிவ் என வந்ததாகவும் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.