குடியரசுத் தலைவர் மாளிகையில் நடமாடிய விலங்கு - வைரல் வீடியோ!!
![tn](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/79ed80e3d7a605dfa5dfad9272b59037.webp)
நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் மத்திய அமைச்சர்கள் பதவியேற்றபோது, அந்த இடத்தின் பின்னே விலங்கு ஒன்று நடமாடியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நடந்த பிரமாண்ட விழாவில், வெளிநாட்டு அரச தலைவர்கள் மற்றும் பிற உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட 8,000 விருந்தினர்கள் கலந்துகொண்டார். ஆனால் சமூக வலைதளங்களில், அழைக்கப்படாத விருந்தினர் ஒருவர் கேமராவில் சிக்கியிருப்பது வைரலாகி வருகிறது. பிஜேபி எம்பி துர்கா தாஸ் உகே, பதவியேற்பு நடைமுறையை முடித்துக் கொண்டு ஜனாதிபதி திரௌபதி முர்முவை வாழ்த்திக் கொண்டிருந்தபோது, பின்புறம் பூனை போன்ற விலங்கு ஒன்று நடந்து சென்றது.
#Watch | Viral Video Shows "Mysterious" Animal At Rashtrapati Bhavan During Oath https://t.co/t2bHLqNMb0 pic.twitter.com/ZptVjCWMGU
— NDTV (@ndtv) June 10, 2024
#Watch | Viral Video Shows "Mysterious" Animal At Rashtrapati Bhavan During Oath https://t.co/t2bHLqNMb0 pic.twitter.com/ZptVjCWMGU
— NDTV (@ndtv) June 10, 2024
அது சிறுத்தையா? சாதாரண பூனையா? அல்லது நாயா? ஜனாதிபதி மாளிகையில் எந்த விலங்கு சாதாரணமாக உலா வந்தது உள்ளிட்ட கேள்விகளுடன் சமூகவலைத்தளத்தில் அதற்கான வீடியோ பரவி வருகிறது.