வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடரா அறிவிக்க எது தடையா இருக்குன்னு சொல்லுங்க - கேரள முதல்வர் பினராயி விஜயன்

 
pinarayi

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.  

கேரளாவின் வயநாட்டில் கனமழை காரணமாக கடந்த திங்கள்கிழமை 3 இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி  ஆகிய கிராமங்கள் மண்ணில் புதையுண்டு போயுள்ளன. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 280 ஐ கடந்துவிட்டது. தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, தன்னார்வலர்கள் என பலர் மீட்புப் பணியில் களமிறங்கியுள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணி கடும் சவாலாகியுள்ளது. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகே மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 6,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு 82 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வயநாடு நிலச்சரிவை  தேசிய பேரிடரா அறிவிக்க எது தடையா இருக்குன்னு சொல்லுங்க - கேரள முதல்வர் பினராயி விஜயன் 

வயநாட்டை புரட்டிப்போட்டுள்ள நிலச்சரிவின் கோர காட்சிகளும், மீட்பு பணிகளின் போது தோண்ட தோண்ட சடலங்களாக கண்டெடுக்கப்படுவதும்,  மீட்கப்பட்ட மக்கள் உடமைகள், உறவுகளை இழந்து தவிக்கும் நிலை பார்ப்போரை உடைந்துபோகச் செய்கிறது.  இதனையொட்டி நிலச்சரிவு தொடர்பாக இரங்கல் தெரிவித்து வரும் பலரும், கேரள அரசுக்கு நிதியுதவியும் அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட இடங்களை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.  

தொடர்ந்து  வயநாடு நிலச்சரிவு தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “இன்று அரசின் உயர்மட்ட கூட்டம் நடந்தது. அதன் பிறகு அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நிலச்சரிவில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை மீட்பதே எங்கள் கவனம். மீட்புப்பணியில் ராணுவத்தின் முயற்சியை பாராட்டுகிறேன். 

வயநாடு நிலச்சரிவை  தேசிய பேரிடரா அறிவிக்க எது தடையா இருக்குன்னு சொல்லுங்க - கேரள முதல்வர் பினராயி விஜயன் 

நிலச்சரிவு உண்டான இடங்களில் மண்ணுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்பதற்கு இயந்திரங்களை கொண்டு வருவது கடினமாக இருந்தது. அதேபோல் ராணுவம் அமைத்து வரும் பெய்லி பாலத்தின் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. சாலியாற்றில் அதிக சடலங்கள் கிடைத்துள்ளன. அதனால், சாலியாற்றில் தொடர்ந்து சடலங்களை தேடும்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதேநேரம், நிலச்சரிவில் மீட்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். முந்தைய பேரிடர்களில் நாங்கள் செய்தது போல், மக்களின் புனர்வாழ்வுக்கான பணிகள் விரைவில் செய்யப்படும்.

தொற்றுநோய் பரவுவதை தவிர்க்க வேண்டும். மனிதர்கள் மட்டுமின்றி, ஏராளமான விலங்குகளும் பேரிடரில் உயிரிழந்தன. அவற்றை எல்லாம் முறையாக புதைக்க வேண்டும். இதற்கு சில நாட்கள் ஆகும். எனவே, நிலச்சரிவு தொடர்பான மீட்புப்பணிகளை மேற்கொள்ள 4 அமைச்சர்கள், மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து இங்கேயே இருப்பர். பேரிடரில், தங்களின் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு மீண்டும் சான்றிதழ் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையை ஏற்கெனவே மத்திய அரசிடம் வைத்துள்ளோம். ஆனால், இன்னும் அறிவிக்கவில்லை. இதனை அறிவிக்க, எது தடையாக இருக்கும் என்பதை மத்திய அரசு தான் சொல்ல வேண்டும்.” என்று தெரிவித்தார்