மக்களின் இந்த தீர்ப்பை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம் - எடியூரப்பா

 
Yeddyurappa

பாஜகவுக்கு வெற்றி தோல்வி ஒன்றும் புதிதல்ல என கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார். 

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடயவுள்ளதை முன்னிட்டு அங்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.  தற்போதைய நிலவரத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 138 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதேபோல் ஆளுங்கட்சியான பாஜக 62 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.
 
இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா தேர்தல் தோல்வி குறித்து கூறியதாவது:- பாஜகவுக்கு வெற்றி தோல்வி ஒன்றும் புதிதல்ல. இந்த முடிவுகளால் கட்சி தொண்டர்கள் பீதியடைய தேவையில்லை. கட்சியின் பின்னடைவு குறித்து ஆய்வு செய்வோம். மக்களின் இந்த தீர்ப்பை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறோம். இவ்வாறு கூறினார்.