ராகுல்காந்தியை வரவேற்ற கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா

 
tn

பெங்களுரு வந்துள்ள ராகுல்காந்தியை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா  வரவேற்றார்.

கர்நாடக மாநில பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராக டெல்லியில் இருந்து பெங்களூரு வந்தார்  ராகுல்காந்தி. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது செய்தித்தாள்களில் அவதூறான விளம்பரங்கள் வெளியிட்டதாக கர்நாடக பாஜக தொடர்ந்த வழக்கில், ராகுல் காந்தி இன்று ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

tn

இந்நிலையில் பெங்களுரு விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியை வரவேற்ற கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வரவேற்றார். 
 rahul
முன்னதாக கடந்த 2023 சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ., அரசின் மீது '40 சதவீத கமிஷன்' அரசு என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அத்துடன் தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி , சித்தராமையா, சிவகுமார் ஆகியோர் பா.ஜ., வை 40 சதவீத கமிஷன் அரசு என, குற்றம் சாட்டினர். அத்துடன்  2023, மே 5ல், நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தனர். இதுதொடர்பாக பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், கர்நாடக பா.ஜ., முதன்மை செயலர் கேசவ பிரசாத், 2023 மே 8ல் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.