தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம் - கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பேட்டி

 
Basavaraj

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவால் பெரும்பான்மையை பெற முடியாத நிலையில், தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம் என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். 

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடயவுள்ளதை முன்னிட்டு அங்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 36 மையங்களில் வாக்கு என்னும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் 36 அறைகளில் 4256 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு என்னும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவில் ஆட்சி பொறுப்பில் உள்ள பாஜக தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. கர்நாடக தேர்தல் தற்போதைய நிலவரத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 125க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதேபோல் ஆளுங்கட்சியான பாஜக 65 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 20க்கும் இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.
 
இந்நிலையில், தோல்வியை ஏற்றுக்கொள்வதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கர்நாடக தேர்தலில் எங்களால் பெரும்பான்மையை பெற முடியவில்லை.  முழுமையான முடிவுகள் வந்ததும் தோல்விக்கான காரணத்தை ஆராய்வோம். தோல்வியை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறோம். இவ்வாறு கூறினார்.