ஆதித்யா எல் 1 விண்கலம் ஏவுதலை நேரில் பார்வையிட முன்பதிவு - இஸ்ரோ அறிவிப்பு..

 
ஆதித்யா எல் 1 விண்கலம் ஏவுதலை நேரில் பார்வையிட முன்பதிவு - இஸ்ரோ அறிவிப்பு..

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்படும்  'ஆதித்யா எல்-1' என்ற விண்கலம் ஏவப்படுவதை நேரில் பார்வையிட விண்ணப்பிக்கலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது.  

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவில் தனது வெற்றிப்பயணத்தை தொடங்கிய கையோடு,  சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை ஏவவுள்ளது.  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற (செப்.) 2-ந்தேதி பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம்  ஆதித்யா விண்கலத்தை விண்ணில் ஏவ இருக்கிறது. இந்த விணகலம் திட்டமிட்டபடி இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.  

ஆதித்யா எல் 1 விண்கலம் ஏவுதலை நேரில் பார்வையிட முன்பதிவு - இஸ்ரோ அறிவிப்பு..

4 மாத பயணங்களுக்கு பிறகு இலக்கை அடைந்து சூரியனில் ஆய்வை தொடங்கும்.  பொதுவாக ஒவ்வொரு முறை  ராக்கெட் ஏவப்படும்போதும்  மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட இஸ்ரோ அனுமதி வழங்கும். இதற்காக  ஸ்ரீஹரிகோட்டாவில் தனியாக 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பார்வையாளர் மாடத்தையும் இஸ்ரோ அமைத்துள்ளது.  இந்த நிலையில் ஆதித்ய எல்1 விண்கலம் ஏவுதல் நிகழ்வை நேரில் பார்வையிட விரும்புகிறவர்கள் https://lvg.shar.gov.in என்ற இணையதளத்தில் பெயரை முன்பதிவு செய்து, அதற்கான அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று இஸ்ரோ தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.