இந்தியாவை இனி பாரத் என்றே அழைக்க வேண்டும்! – உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
May 29, 2020, 16:49 IST1590751190000
இந்தியாவை இனி ஆங்கிலத்திலும் பாரத் என்றே அழைக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தியாவை இந்தி மொழியில் பாரத் என்று அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் இந்தியா என்று அழைக்கப்படுகிறது. பாரத் என்ற பெயரை விட இந்தியா என்ற பெயர்தான் உலக அளவில் அறிமுகம். இந்தியாவிலும் தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் பாரத் என்றால் பலருக்கு யாரோ ஒரு நபரின் பெயர் என்றுதான் தெரியும்.
தற்போது இந்தியாவை ஆங்கிலத்திலும் பாரத் என்று அழைக்க, பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வருகிற ஜூன் 2ம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.