24 மணி நேரத்தில் பிரசவம்.. கர்ப்பிணி மனைவியை துடிக்க துடிக்க கொன்ற கொடூர கணவர்

காதலித்த மனைவிக்கு 24 மணி நேரத்தில் பிரசவம் ஆக வேண்டிய நிலையில் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மதுரவாடாவை சேர்ந்த ஞானேஸ்வர ராவ், அனுஷா இருவரும் காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மதுராவாடா பி.எம். பாலம் ஊடா காலனியில் தனியாக வசித்து வந்தனர். ஞானேஷ்வர் ஸ்கவுட்ஸ், சாகர் நகர் வியூ பாயிண்ட் ஆகிய இரண்டு இடங்களில் துரித உணவு மையங்களை நடத்தி குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் அனுஷா கர்ப்பமான நிலையில் 7-வது மாதத்தில் சீமந்தம் மிகச்சிறப்பாக செய்தனர்.
இந்த நிலையில் பிரசவ தேதி நெருங்க நெருங்க ஞானேஸ்வருக்கு அனுஷா மீது சந்தேகம் ஏற்பட தொடங்கியது. பிரசவ நேரத்தில் அருகில் இருந்து கவனித்து கொள்ள வேண்டிய ஞானேஸ்வர் தொடர்ந்து சண்டையிட்டு அனுஷாவிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வந்தனர். இந்த நிலையில் பிரசவத்திற்கு 24 மணி நேரம் இருந்த மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் அனுஷா கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அனுஷா உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு போன் செய்து அனுஷாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அவர்களை உடனடியாக வரச் சொன்னார். அனைவரும் அங்கு விரைந்து வந்து அனுஷாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அனுஷா ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இதன் மூலம், அனுஷாவின் உடல் விஜயவாடா அரசு பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விஷயம் அனுஷாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் விரக்தியில் கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் ஞானேஸ்வரை பிடித்து விசாரித்தபோது அனுஷாவை கழுத்தை நெரித்து கொன்றதாக ஞானேஸ்வர ராவ் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.