நிலவில் தரையிறங்கிய பின் விக்ரம் லேண்டர் எப்படி செயல்படும்?

 
vikram

சந்திரயான் தொடரின் முதல் விண்கலமான சந்திரயான்-1, நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதைக் கண்டறிந்த பெருமைக்குரியது, சந்திரயான்-2 லேண்டர், தொடர்பை இழந்த நிலையில், பகுதி அளவு மட்டுமே வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 (எல்விஎம் 3) ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் கடந்த 14-ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது, சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து உந்துவிசை கலன், லேண்டர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனித்தனியாக பிரிந்தது. தனியாக பிரிந்த லேண்டரின் உயரம் ஒவ்வொரு கட்டமாக குறைக்கப்பட்டு நிலவை நோக்கி பயணித்தது.

சந்திரயான் - 3 நிலவில் இறங்கும் இடம் கணிப்பு

இந்நிலையில் சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் திட்டமிட்டப்படி மாலை 6.04 மணிக்கு தரையிறங்கினால், அதன்பின் 14 நாட்கள் செயல்படும், இதன் எடை 749.86 கிலோவாகும்.  அதாவது பூமியின் நேரப்படி 14 நாட்களும், நிலவின் நேரப்படி ஒரே ஒரு நாளும் செயல்படவுள்ளது. 26 கிலோ எடை கொண்ட ரோவர் நிலவில் தரையிறங்கிய பின்பு தனது ஆய்வுகளை மேற்கொள்ளும். ரோவரில் இணைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சென்சார், ஆண்டனாக்கள் மூலம் தகவல்கள் பெறப்படும்.