ஜி20 மாநாடு விருந்து - 500 தொழிலதிபர்களுக்கு அழைப்பு ; 500 வகையான உணவு வகைகள் தயாரிப்பு

 
tn

ஜி20 மாநாடு விருந்தில் பங்கேற்க 500 தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 ஜி20 மாநாடு கருத்தரங்கு

சர்வதேச அளவிலான ஜி20 அமைப்புக்கு இந்தியா இந்த முறை தலைமை ஏற்றுள்ளது.  அதன்படி ஜி20 குழுவின் 18 வது மாநாடு  நாளை முதல் 10ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது.  இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா ,சீனா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இடம்பெறுகின்றன.  அமெரிக்க அதிபர் ஜோபைடன்,  ஆஸ்திரேலியா பிரதமர் , பிரிட்டன் பிரதமர்,  ஜப்பான் பிரதமர் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். ஜி20 மாநாட்டை முன்னிட்டு சர்வதேச தலைவர்கள்  உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் விருந்து அளிக்கிறார். 

tn

இந்நிலையில் ஜி20 உச்சி மாநாட்டையொட்டி வரும் 9ம் தேதி இரவு குடியரசுத் தலைவர் அளிக்கவுள்ள விருந்தில் பங்கேற்க 500 தொழிலதிபர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கௌதம் அதானி, முகேஷ் அம்பானி, டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், குமார் மங்கலம் பிர்லா, ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல், மகேந்திர நிறுவன தலைவர் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட 500 தொழிலதிபர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டையொட்டி 500 வகையான உணவு வகைகள் தயார் செய்யப்பட உள்ளன.  நாளை தொடங்கும் ஜி20 மாநாட்டுக்காக 500 வகையான உணவுகளை தாஜ் ஓட்டல் நிர்வாகம் தயாரிக்கிறது; அசைவ உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகள், தினை உணவுகள் உலக தலைவர்களுக்கு வழங்கப்பட உள்ளன