மைக்ரோசாஃப்ட் கோளாறு: விமான சேவை சீராக இயங்கி வருகிறது - மத்திய அரசு விளக்கம்..

 
மைக்ரோசாஃப்ட் கோளாறு: விமான சேவை சீராக இயங்கி வருகிறது - மத்திய அரசு விளக்கம்.. 

 மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை சீராகி, விமான சேவை வழக்கம் போல் செயல்பட்டு வருவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ‘கிரவுட் ஸ்டிரைக்’ என்ற நிறுவனம், மைக்ரோசாப்ட், கூகுள் உட்பட பல்வேறு முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. உலகம் முழுவதும் 23,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கிரவுட் ஸ்ட்ரைக் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளன. இந்த ‘கிரவுட்ஸ்டிரைக்’ நிறுவனம்  அவ்வப்போது தனது ‘பால்கன் சென்சார்’ மென்பொருளை அப்டேட் செய்வது  வழக்கம். அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பை மேம்படுத்த  கிரவுட் ஸ்டிரைக் தனது ‘பால்கன் சென்சார்’ நேற்று சாப்ட்வேரை  அப்டேட் செய்துள்ளது. இதில் எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு,  மைக்ரோ சாஃப்டின் சர்வர்  திடீரென முடங்கும் நிலை ஏற்பட்டது.  

மைக்ரோசாஃப்ட் கோளாறு: விமான சேவை சீராக இயங்கி வருகிறது - மத்திய அரசு விளக்கம்.. 

இதனால் உலகம் முழுவதும் மைக்ரோ சாஃப்ட் அஸூர், ஆபீஸ் என அதன் 365 சேவைகளை பயன்படுத்தும் நிறுவனங்களின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கின. பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் என  மைக்ரோசாப்ட் சாஃப்ட்வேரை பயன்படுத்தி  இயங்கும் கணினி, மடிக்கணினிகளில் நீல திரை தோன்றி, ‘கணினி செயலிழந்துள்ளது’(Error)என காட்டியது. இதனால் மைக்ரோசாஃப்ட் இயங்குதளத்தை பிரதானமாக பயன்படுத்தும் விமான சேவை முற்றிலும் முடங்கியது. பயணிகளுக்கு போர்டிங் பாஸ் வழங்குவது,  விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறங்குவது என அனைத்து செயல்பாடுகளிலும்  பிரச்சினை எழுந்தது. இதனால் நேற்று ( ஜூலை 19) மட்டும்  உலகம் முழுவதும் 1,400 விமாங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 3,000க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.   

மைக்ரோசாஃப்ட் கோளாறு: விமான சேவை சீராக இயங்கி வருகிறது - மத்திய அரசு விளக்கம்.. 

இந்நிலையில் தற்போது இந்தியாவில் விமான சேவை சீராக இயங்கி வருவதாக  மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து வெலியிடப்பட்டுள்ள  அறிக்கையில், “அதிகாலை 3 மணி முதல், விமான நிலையங்களில் விமான சேவை வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. தற்போது விமானப் போக்குவரத்து சீராக நடந்து வருகிறது. நேற்று ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக பின்னடைவுகள் உள்ளன. அவை படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருகின்றன. இன்று (ஜூலை 20) நண்பகலுக்குள் அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். பயணத்திட்ட மாற்றம் மற்றும் பணத்தை திருப்பியளித்தல் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் விமான சேவை நிறுவனங்கள் மற்றும் எங்களுடைய விமான நிலையங்களின் செயல்பாடுகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.