நாகாலாந்து வரலாற்றில் முதல் பெண் எம்எல்ஏ - ஹேக்கானி ஜக்காலு வெற்றி

 
nagaland mla

நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக பெண் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகியுள்ளார். 

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய  3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.   அதன்படி, 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த 16ம் தேதி  வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதேபோல் தலாக 60 தொகுதிகளைக் கொண்டுள்ள   நாகாலாந்து , மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த 3 மாநிலங்களிலும் இன்று  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  சரியாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முன்னிலை நிலவரங்கள்  வெளியாகி வருகின்றன. திரிபுரா , நாகாலாந்து மாநிலங்களில் ஆளும் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில், நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக பெண் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகியுள்ளார். திமாபூர் -3 தொகுதியில் என்டிபிபி கட்சி சார்பில் போட்டியிட்ட, வேட்பாளர் ஹேக்கானி ஜக்காலு வெற்றி பெற்றார்.  நாகலாந்து மாநிலத்தில், பாஜக கூட்டணி 33 இடங்களிலும், ஜனநாயக முற்போக்கு கூட்டணி 03 இடங்களிலும்,  நாகாம 02, மற்றவை 22 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.