2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..

2024-25ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (ஜூலை 22) தொடங்கி நிலையில், நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கு பிறகு புதிய அரசு அமைந்திருப்பதால் பட்ஜெட்டின் முன்னோட்டமாக கடந்த 2023-24 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். இதன்மூலம் தொடா்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த மறைந்த முன்னாள் பிரதமா் மொராா்ஜி தேசாயின் சாதனையை நிா்மலா சீதாராமன் முறியடிக்கிறாா்.
பட்ஜெட் தாக்கலாவதை ஒட்டி காலையில் நிதியமைச்சகத்துக்கு வந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், வழக்கம்போல் அங்கே நிதியமைச்சக அதிகாரிகளுடன் பட்ஜெட் உரை அடங்கிய டேப்ளட்டுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். பின்னர் பட்ஜெட் நகலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார். பட்ஜெட் தொடர்பான தகவல்களையும் அவர் குடியரசுத் தலைவரிடம் விளக்கினார். பின்னர் நிர்மலா சீதாராமனுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தயிரும் சர்க்கரையும் கலந்த இனிப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பின்னர் நாடாளுமன்றம் வந்தடைந்தார். அவரைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் நாடாளுமன்றத்துக்கு வந்து சேர்ந்தார். 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். முதலாவதாக கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் சாதனைகளை அவர் பட்டியலிடுகிறார்.