தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்..!!

 
தொழில் அதிபர் அனில் அம்பானி நிறுவனங்களில் ED ரெய்டு..!! தொழில் அதிபர் அனில் அம்பானி நிறுவனங்களில் ED ரெய்டு..!!

 பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.  

ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியின் குழுமத்தின் கீழ் உள்ள RAAGA நிறுவனம் யெஸ் (YES)வங்கியிடமிருந்து கடன் பெற்றுள்ளது. ரூ.12,800 கோடி கடன் பெற்றிருந்த நிலையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்தவில்லை எனக்கூறப்படுகிறது. கடன் தொகையையும், வட்டியையும் திருப்பி செலுத்துவதில்  மோசடி செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.  

அமலாக்கத்துறை

இதனிடையே பணமோசடி வழக்கு தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியும் அனில் அம்பானி மோசடி நபர் என அறிவித்தது. எஸ்பிஐ வங்கி அறிவித்த அடுத்த நாளே, (ஜூலை 24 அன்று)   அனில் அம்பானியின் 5  நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை நடத்தியது.  பெரிய அளவிலான நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் நிலையில்,  சிபிஐ பதிவு செய்த இரண்டு எஃப்ஐஆர்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை  இந்த சோதனைகளை நடத்தியது.  டெல்லி மற்றும் மும்பையில் 35 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில்,  25க்கும் மேற்பட்டோரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.  

இந்நிலையில் தற்போது, தொழிலதிபர் அனில் அம்பாணிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.  அதில், ஆகஸ்ட் 5ம் தேதி அனில் அம்பானியை விசாரணைக்கு ஆஜராகுமாறு  அமலாக்கத்துறை  கேட்டுக்கொண்டுள்ளது.