டெல்லியை தொடர்ந்து பீகார், ஒடிசாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

 
earth

இன்று அதிகாலை டெல்லியில் நிலடக்கம் ஏற்பட்ட நிலையில் காலை 11.20 மணி அளவில் பீகார், ஒடிசா என அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம்

இந்திய நேரப்படி காலை 8:02 மணிக்கு பீகாரில் உள்ள சிவான் மாவட்டத்தில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. பீகார் பேரிடர் மேலாண்மைத் துறை (DMD) படி, சிவானில் மட்டுமல்ல, அருகிலுள்ள மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது, இது உள்ளூர்வாசிகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தியது. நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

செய்தி பரவியதும், சிவான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறினர். புவியியல் ரீதியாக நில நடுக்க பாதை சுமத்ரா தீவை நோக்கி செல்கிறது என புவியில் ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 13 நிமிடங்கள் கழித்து, காலை 8:15 மணிக்கு, ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் 4.7 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கங்களுடன் நிலம் குலுங்கும்போது பலத்த சத்தம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.