வாடிக்கையாளர்களிடம் மொபைல் எண்ணை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது! - மத்திய அரசு உத்தரவு..

 
வாடிக்கையாளர்களிடம் மொபைல் எண்ணை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது! - மத்திய அரசு உத்தரவு..  

சேவைகளை வழங்குவதற்கு வாடிக்கையாளர்களிடம் செல்போன் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என வியாபாரிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சில்லறை வர்த்தக கடைகளில்  வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு செல்போன் என்னை தருமாறு  வியாபாரிகள் வற்புறுத்துவதாகவும், அவ்வாறு தர மறுத்தால் அவர்களுக்கு சேவைகள் வழங்கப்படுவதில்லை என்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு தொடர்ந்து  புகார்கள் சென்றுள்ளன.  இந்தியாவில் சில்லறை வியாபாரிகள் பில் போடுவதற்கு வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களை பெறவேண்டியது கட்டாயம் இல்லை. ஆனால் வியாபார பரிமாற்றங்களை செய்து முடிப்பதற்கு வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணை  சில்லறை வியாபாரிகள் கேட்டு இக்கட்டான சூழ்நிலை ஏற்படுத்துவதாகவும்,  பெரும்பாலான நேரங்களில் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு கூட விடுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.   

phone

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோகித் குமார் சிங்,  வாடிக்கையாளர்கள் தங்களது  தனிப்பட்ட தொடர்பு எண் விவரங்களை தரவில்லை என்றால் பில் போட முடியாது என வியாபாரிகள் நிறுத்துவதாக கூறினார். இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நியாயமற்ற செயல் எனவும் அவர் விமர்சித்தார்.  இப்படி தகவல்களை  சேகரிப்பது சரியில்லை என்றும் கூறினார்.  குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் எண்களை தர வேண்டும் என்று சில்லரை வியாபாரிகள் வற்புறுத்தக்கூடாது என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.