போதைப் பொருள் விவகாரம் : நடிகை தீபிகா படுகோனிடம் போலீசார் விசாரணை!

 

போதைப் பொருள் விவகாரம் : நடிகை தீபிகா படுகோனிடம் போலீசார் விசாரணை!

மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஆஜராகியுள்ளார்.

போதைப் பொருள் விவகாரம் : நடிகை தீபிகா படுகோனிடம் போலீசார் விசாரணை!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தின் எதிரொலியாகப் பாலிவுட்டில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகைகள் பலர் சிக்கியுள்ளனர். அந்த வகையில் சுஷாந்த் சிங் மரண வழக்கில் போதைப் பொருள் விவகாரம் குறித்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். அவரிடம் ரியா உடனான தொடர்பு, போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

போதைப் பொருள் விவகாரம் : நடிகை தீபிகா படுகோனிடம் போலீசார் விசாரணை!

சுஷாந்த் சிங்கிற்கு போதைப் பொருள் வாங்கிக் கொடுத்த புகாரில் அவரின் காதலி ரியா சக்கரவர்த்தி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் நடிகை சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் ஆகியோர் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனடிப்படையில் நடிகை ரகுல் பிரீத் சிங்கிடம் நேற்று போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.