இந்தியாவில் ஒரேநாளில் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. ஒருபக்கம் கொரோனா, மறுபக்கம் ஒமிக்ரான் பாதிப்பு ஆகியவை வேகமாக பரவி வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,68,063ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,79,723 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று தொற்று பாதிப்பு 1.70 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் 69,959 பேர் கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 277 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அதேசமயம் கொரோனாவால் 8,21,446 பேர் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இந்தியாவில் அதிவேகமாக பரவி வரும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 4,461 ஆக அதிகரித்துள்ளது.