இந்தியாவில் அதிரடியாக குறையும் கொரோனா - இன்றைய நிலவரம் இதோ!!
இந்தியாவில் மேலும் 13,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 13 ஆயிரமாக குறைந்துள்ளது. நேற்று 16,464, நேற்று முன்தினம் 19,673 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 13,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்தை தாண்டியுள்ளது. அத்துடன் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24மணிநேரத்தில் 34ஆக பதிவான நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,26,430 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் இந்தியாவில் கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 43383787 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 1,39,792 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 26,77,405 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 204.60தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.