பாஜகவின் திருட்டுத்தனத்தால் மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - கார்கே ஆவேசம்!
பாஜகவின் திருட்டுத்தனத்தால் மகாராஷ்டிரா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைதள பதிவில், பாஜகவின் திருட்டுத்தனத்தால் மகாராஷ்டிரா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. முகநூல் நேரலையில் அரசியல்வாதி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். வெளிப்படையாகப் பேசும் பத்திரிக்கையாளர் பாஜக-ஆர்எஸ்எஸ்-ன் கட்டுக்கடங்காத குண்டர்களால் தாக்கப்படுகிறார்.
பாஜக எம்எல்ஏ ஒருவர் காவல்நிலையத்தில் மற்றொரு அரசியல்வாதியை வெளிப்படையாக துப்பாக்கியால் சுடுகிறார். மகாராஷ்டிராவின் சட்டம் ஒழுங்கை காங்கிரஸ் எப்போதும் பராமரித்தது, அப்போதுதான் மகாராஷ்டிராவின் பொருளாதார வளர்ச்சி சாத்தியமானது. ஆனால் அமலாக்கப் படையால் உருவான பாஜக அரசு குண்டா ஆட்சியைப் பரப்பி மகாராஷ்டிர மக்களின் பாதுகாப்போடு விளையாடுகிறது.