காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பெங்களூரு செல்ல கட்சி தலைமை அறிவுறுத்தல்!

 
congress

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பெங்களூரு செல்ல கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடயவுள்ளதை முன்னிட்டு அங்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 36 மையங்களில் வாக்கு என்னும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில் 36 அறைகளில் 4256 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு என்னும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் கர்நாடகாவில் ஆட்சி பொறுப்பில் உள்ள பாஜக தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. கர்நாடக தேர்தல் தற்போதைய நிலவரத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  அதன்படி 224 தொகுதிகளில் 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.  ஆளும் கட்சியான பாஜக 80 இடங்களிலும் மதசார்பற்ற , ஜனதா தளம் 20க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 

இதன் மூலம் கர்நாடகத்தில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பெங்களூரு செல்ல கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது. குதிரை பேரத்தை தடுக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.ஏக்களை பெங்களூருவுக்கு அழைத்துச் செல்வதாக கூறப்படுகிறது.