ஒரே நாடு ஒரே தேர்தல் - சாத்தியக்கூறுகளை ஆராய குழு அமைப்பு

 
தேர்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கு தனியாகவும், மாநில சட்டமன்றங்களுக்கு தனியாகவும் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு தேர்தலிலும் கோடிக்கனக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் மூலம் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
இதனிடையே நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செட்பம்பர் மாதம் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. சிறப்பு கூட்டத்தொடரில் 5 அமர்வுகள் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாஷ் ஜோஷி அறிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்வதற்காக இந்த சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.