சந்திரபாபு நாயுடு கைது - ஆந்திரா முழுவதும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம்!

 
tn

சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

tn

2019 ஆம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த போது ரூபாய் 317 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அவரை கைது செய்ய போலீசார் சென்றனர்.  சந்திரபாபு நாயுடுவிற்கு பாதுகாப்பு கொடுத்து வரும் சிறப்பு பாதுகாப்பு படையினர் அதிகாலை 5.30 மணி வரை அவரை யாரும் நெருங்க  முடியாது என்று தெரிவித்துவிட்டனர். இதையடுத்து இன்று 5.30 மணிக்கு அவர் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்விசாரணைக்காக விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Chandrababu Naidu proposes to establish a music university and a national award in commemoration of SPB

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் பேருந்துகளும், தமிழ்நாடு எல்லையிலே நிறுத்தப்பட்டுள்ளது.