இன்று பதவியேற்கிறார் சம்பாய் சோரன்

 
tn

நிலமோசடி மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக பதியப்பட்ட வழக்கில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், அவரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்தது. சுமார் 6 மணிநேர விசாரணைக்கு பிறகு ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.

ED arrests JMM President Hemant Soren in land scam case; Champai Soren will  be new CM | Mint

இதையடுத்து அவர், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அமலாக்கத்துறையின் கஸ்டடியிலேயே ஆளுநர் மாளிகைக்கு சென்று ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.  ஹேமந்த் அமைச்சரவையில் பட்டியலினத்தோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

tn

இந்நிலையில் ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் சம்பாய் சோரன்; சம்பாய் சோரன் ஆட்சியமைக்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சட்டமன்றக் கட்சித் தலைவராக நேற்று சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.