துறை மாற்றப்பட்டது தண்டனை அல்ல...தொலைநோக்கு பார்வை- அமைச்சர் கிரண் ரிஜிஜூ

 
Kiren

சட்டத் துறையில் இருந்து புவி அறிவியல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது தண்டனை அல்ல, பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை என அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். 

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் கிரண் ரிஜிஜூ. இவர் சட்டத்துறை அமைச்சராக இருந்து வந்த நிலையில், அவரது துறை மாற்றப்பட்டது. புதிய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன்ராம் மேவால் நியமனம் செய்யப்பட்டார். கிரண் ரிஜிஜூ மத்திய புவி அறிவியல் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். 
அர்ஜூன் ராம் மேக்வால் கலாச்சாரத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த நிலையில் அவர் சட்டத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் மத்திய சட்டத்துறை இணை அமைச்சரும் மாற்றப்பட்டுள்ளார்.  மத்திய சட்டத்துறை அமைச்சர் மாற்றப்பட்ட நிலையில், சட்டத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகல் மாற்றப்பட்டுள்ளார். சட்டத்துறை இணை அமைச்சராக இருந்த அவர் மக்கள் நல்வாழ்வுத்துறை இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், துறை மாற்றப்பட்டது குறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: பல்வேறு துறைகளை கையாள வாய்ப்பு வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. சட்டத் துறையில் இருந்து புவி அறிவியல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது தண்டனை அல்ல. இது அரசின் திட்டம். பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை. எதிர்க்கட்சிகள் நிச்சயமாக என்னை விமர்சிக்கத்தான் செய்வார்கள். எதிர்க்கட்சிகள் எனக்கு எதிராக பேசுவது ஒன்றும் புதிதல்ல. முந்தைய அமைச்சகம் தொடர்பான கேள்விகளைக் கேட்க வேண்டாம், அவை இனி பொருந்தாது. இவ்வாறு கூரினார்.