பசுமை எரிசக்தி 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்... ரூ. 12,000 கோடி நிதி ஒதுக்கீடு..

 
பசுமை எரிசக்தி திட்டம்


தமிழகத்தில் பசுமை எரிசக்தி 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலங்களில் இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களில் பசுமை எரிசக்தி 2ம் கட்ட  திட்டத்தை செயல்படுத்த  மத்திய அமைச்சரவை இன்று (06.01.22)  ஒப்புதல் அளித்திருக்கிறது.   இதுகுறித்து அறிவித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், தமிழகம்,  குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் ஆகிய  7  மாநிலங்களில் பசுமை எரிசக்தி திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்தார். . 

பசுமை எரிசக்தி திட்டம்

இந்த பசுமை எரிசக்தி 2ம் கட்ட திட்டத்தின் கீழ் 20 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யப்படும் எனவும் , இதற்காக ரூ.12,031 கோடி  நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த இரண்டாம் கட்ட பசுமை எரிசக்தி திட்டம் 2021 - 22 முதல்  2025-26 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படுமென்று தெரிவித்தார்.

பசுமை எரிசக்தி திட்டம்

2030 ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எர்சக்தி உற்பத்தி செய்யப்படும் என்றார். மேலும் ஏற்கனவே ரூ.10,142 கோடி செலவில் தொடங்கப்பட்ட முதல் கட்ட பசுமை எரிசக்தி திட்டப்பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து விட்டதாக தெரிவித்தார்.