டெல்லியில் உள்ள இந்து மத வழிபாட்டு தளத்தில் இங்கிலாந்து பிரதமர் வழிபாடு!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று காலை டெல்லியில் உள்ள இந்து மத வழிபாட்டு தளத்தில் வழிபாடு செய்தார்.
இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்தியா வந்துள்ள ஜி-20 தலைவர்களுக்கு நேற்று இரவு சுவையான இந்திய சைவ உணவு பரிமாறப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று துவக்க உரையாற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக இணைக்கப்படுவதாக ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார். ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்மொழிந்த நிலையில் ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினரானது. ஜி20 மாநாட்டுக்கு இடையே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று காலை டெல்லியில் உள்ள இந்து மத வழிபாட்டு தளத்தில் வழிபாடு செய்தார். டெல்லியில் உள்ள சுவாமி நாராயன் அக்சார்தாம் வழிபாடு தளத்தில் ரிஷி சுனக் வழிபாடு செய்தார். அவருடன் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் வழிபாடு செய்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இந்து மதத்தை பூர்விகமாக கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது.