திரிபுராவில் பாஜக கூட்டணிக்கு வெற்றி முகம் - 42 இடங்களில் முன்னிலை

 
bjp

3 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், திரிபுராவில் பாஜக கூட்டனி 42 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் அங்கு பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. 
  
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய  3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.   அதன்படி, 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த 16ம் தேதி  வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதேபோல் தலாக 60 தொகுதிகளைக் கொண்டுள்ள   நாகாலாந்து , மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த 3 மாநிலங்களிலும் இன்று  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  சரியாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முன்னிலை நிலவரங்கள்  வெளியாகி வருகின்றன. 

இந்நிலையில், திரிபுராவில் பாஜக கூட்டனி 42 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் அங்கு பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. தற்போதைய நிலவரப்படி திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில், பாஜக கூட்டணி 42 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சி 10 இடங்களிலும், திமோக 08 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக திரிபுரா மாநிலத்தில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.