நாகலாந்திலும் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக கூட்டணி - 42 இடங்களில் முன்னிலை

 
BJP

நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக கூட்டணி 42 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளாதால் மீண்டும் பாஜக கூட்டணி அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கவுள்ளது. 
 
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய  3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.   அதன்படி, 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த 16ம் தேதி  வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதேபோல் தலாக 60 தொகுதிகளைக் கொண்டுள்ள   நாகாலாந்து , மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த 3 மாநிலங்களிலும் இன்று  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  சரியாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முன்னிலை நிலவரங்கள்  வெளியாகி வருகின்றன. 

இந்நிலையில், நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல் முடிவில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.  பாஜக கூட்டணி 42 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளாதால் மீண்டும் பாஜக கூட்டணி அம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கவுள்ளது. நாமுக 4 இடங்களிலும், காங்கிரஸ் 01 இடங்களிலும், மற்ற கட்சிகள் 13 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதனால் நாகலாந்து மாநிலத்தில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.