நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல் - பாஜக 37 தொகுதிகளில் முன்னிலை

 
bjp

நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. 

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய  3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.   அதன்படி, 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த 16ம் தேதி  வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதேபோல் தலாக 60 தொகுதிகளைக் கொண்டுள்ள   நாகாலாந்து , மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த 3 மாநிலங்களிலும் இன்று  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  சரியாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முன்னிலை நிலவரங்கள்  வெளியாகி வருகின்றன. திரிபுரா , நாகாலாந்து மாநிலங்களில் ஆளும் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 

நாகலாந்து சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தற்போதைய தேர்தல் முடிவுகளின் படி நாகலாந்தில் பாஜக கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 02 இடங்களிலும், நாமமு கட்சி 02 இடங்களிலும், பிற கட்சிகள் 19 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அந்த கட்சி மீண்டும் நாகலாந்து மாநிலத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது.