திரிபுரா, நாகலாந்தில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கிறது

3 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், திரிபுரா மற்றும் நாகலாந்தில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த 16ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதேபோல் தலாக 60 தொகுதிகளைக் கொண்டுள்ள நாகாலாந்து , மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 3 மாநிலங்களிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சரியாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
இதில் திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக- திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி 40 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கூட்டணி 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் நாகலாந்து மாநிலத்தில் பாஜக கூட்டணி 35 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மேகாலயாவை பொறுத்தவரை ஆளும் தேசிய மக்கள் கட்சி 30க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 08 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ் 09 இடங்களிலும் மற்ற கட்சிகள் 11 இடன்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.