ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்!

 
tt

நில மோசடியுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக, ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்தது. முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்தபோது ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் 8.5 ஏக்கா் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

tt

அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு அவா் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் கடந்த மே 3 நிராகரித்தது.

1

இந்நிலையில்  நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கியது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம். நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் கைதாகி சிறையில் உள்ள ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.