பக்தர்கள் வசதிக்காக அயோத்தி கோயிலில் 6 பெரிய நுழைவுவாயில்கள் அமைப்பு

 
அயோத்தி ராமர் கோவிலுக்கு, தமிழகத்து வெங்கல மணி செல்வதாக ‘வதந்தி’

அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலயத்தின் முதல் கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

Ayodhya Ram Temple 74 Percent Muslims Happy; Information in the study | அயோத்தி  ராமர் கோவில் 74 சதவீத முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியே; ஆய்வில் தகவல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஸ்ரீராமருக்கு மிகப்பெரிய ஆலய கட்டப்பட்டு ஜனவரி 22 இல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் அயோத்தியில் பகவான் ஸ்ரீராமரை தரிச்ச வரும் பக்தர்கள் வசதிக்காக அயோத்தி கோயிலில் 6 பெரிய நுழைவுவாயில்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த நுழைவுவாயில்களுக்கு ராமாயணத்தில் வரும் 6 கதாபாத்திரங்களின் பெயர் சூட்டப்பட உள்ளன.

லக்னெள-அயோத்தி சாலையில் மிகப்பெரிய நுழைவாயில் வளாகம் அமைக்கப்பட்டு அதற்கு ஸ்ரீராமர் நுழைவு வாயில் என பெயரிடப்படும். கோரக்பூர்-அயோத்தி சாலையில் மிகப்பெரிய நுழைவு வாயில் வளாகம் கட்டப்பட்டு அதற்கு ஹனுமன் நுழைவுவாயில் என பெயரிடப்படும். கோண்டா-அயோத்தி சாலையில் ஒரு மிகப்பெரிய நுழைவுவாயில் வளாகம் கட்டப்பட்டு அதற்கு லெட்சுமணன் நுழைவுவாயில் என பெயரிடப்படும். பிரயாகை-அயோத்தி சாலையில் ஒரு மிகப்பெரிய நுழைவு வாயில் வளாகம் கட்டப்பட்டு அது பரதன் நுழைவு வாயில் என அழைக்கப்படும். மற்றொரு மிகப்பெரிய நுழைவு வாயில் வளாகம் அம்பேத்கர் நகர்-அயோத்தி சாலையில் அமைக்கப்பட்டு அதற்கு ஜடாயு நுழைவுவாயில் என பெயரிடப்படும். ரேபரேலி-அயோத்தி சாலையில் மற்றொரு மிகப்பெரிய நுழைவுவாயில் அமைக்கப்பட்டு அதர்கு காருண் நுழைவு வாயில் என அழைக்கப்படும்.

Image

அயோத்தியில் வரும் 22 ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக்க விழாவில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். இந்த நிகழ்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். கும்பாபிஷேகத்தை முன்னிட்ட சடங்குகள் செவ்வாய்க்கிழமை முறைப்படி தொடங்கின. மைசூரை அடிப்படையாகக் கொண்ட ஸ்தபதி (சிற்பி) அருண் யோகிராஜ் வடிவமைத்த ஸ்ரீராமர் சிலைதான் பிரதிஷ்டை செய்வதற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளது. ராமர் ஆலய கும்பாபிஷேகத்துக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், துறவிகள், பிரபலங்கள் என நாடு முழுவதும் 7,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு நாடுகளிலிருந்து 100-க்கும் மேலான சிறப்பு பிரதிநிதிகளும் இதில் பங்கேற்க உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.