அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு - பாதுகாப்பு பணியில் 30,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

 
tn

அயோத்தியில் இன்று நடைபெறும்  கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்த நிகழ்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். கும்பாபிஷேகத்தை முன்னிட்ட சடங்குகள் செவ்வாய்க்கிழமை முறைப்படி தொடங்கின. மைசூரை அடிப்படையாகக் கொண்ட ஸ்தபதி (சிற்பி) அருண் யோகிராஜ் வடிவமைத்த ஸ்ரீராமர் சிலைதான் பிரதிஷ்டை செய்வதற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

tn

ராமர் ஆலய கும்பாபிஷேகத்துக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், துறவிகள், பிரபலங்கள் என நாடு முழுவதும் 7000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் அயோத்தியின் இன்று ராமர் கோயில் பிரதிஷ்டை விழா நடைபெறுகிறது;  அயோத்தி முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு 11,000 ‘சிசிடிவி’ கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது; எஸ்பிஜி, என்எஸ்ஜி , தீவிரவாத தடுப்புப் படை, சிறப்பு கமாண்டோ படை, சிஆர்பிஎப், மத்திய தொழில் பாதுகாப்பு படை, மாநில போலீஸார் உட்பட மொத்தம் 30,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.