வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஆதித்யா L1 விண்கலம்!

 
aditya l1 aditya l1

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆதித்யா எல்.1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து,  சூரியனை ஆய்வு செய்வதற்காக ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை ஏவவுள்ளது. இந்த விண்கலம் திட்டமிட்டபடி இலக்கை அடைய 4 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.  100-120 நாட்கள் பயணித்து ஆதித்யா L1 விண்கலம் சூரியனின் சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆதித்யா எல் 1 விண்கலத்தின் கவுண்ட் டவுன் நேற்று தொடங்கியது. சரியாக முற்பகல் 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலத்தின் கவுண்டவுன் தொடங்கியது. 


இந்த நிலையில், ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம்  ஆதித்யா விண்கல விண்ணில் ஏவப்பட்டது. விண்கலத்தை வெற்றிகாரமாக விண்ணில் ஏவியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.