இந்தியாவில் 27 மாநிலங்களில் ஒமிக்ரான் - 3 ஆயிரத்தை எட்டியது!!
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,17,100 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,83,178 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவை தடுக்கும் வகையில் இந்தியாவில் இதுவரை 149.66 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 3,007 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 377 பேருக்கு புதிதாக ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 876 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 121 ,குஜராத்தில் 154, கேரளாவில் 284 , ராஜஸ்தானில் 174 , தெலுங்கானாவில் 107 என மொத்தம் 3,007 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை 1199 பேர் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர்.
கர்நாடகாவில் 333 பேர், ஹரியானாவில் 114 பேர், ஒடிசாவில் 60 பேர், உத்தர பிரதேசத்தில் 31 பேர், ஆந்திராவில் 28 பேர், மேற்கு வங்கத்தில் 27 பேர் , கோவாவில் 19 பேருக்கும், அசாமில் 9 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 9 பேருக்கும், உத்தரகாண்டில் 8 பேருக்கும், மேகாலயாவில் 4 பேருக்கும், சண்டிகரில் 3 பேருக்கும், ஜம்முவில் 3 பேருக்கும், அந்தமானில் 2 பேருக்கும், பாண்டிசேரியில் 2 பேருக்கும், பஞ்சாப்பில் 2 பேருக்கும், ஹிமாச்சல், லடாக், சத்தீஸ்கர், மணிப்பூரில் தலா ஒருவருக்கு என மொத்தம் 27 மாநிலங்களில் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.