மக்களவையில் நான் நிற்பதற்கு பெரியார்தான் காரணம்- ஆ.ராசா

 
ராசா

மக்களவையில் நான் நிற்பதற்கு பெரியார்தான் காரணம்  என திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்களவையில் உரையாற்றிய ஆ.ராசா, “8 முறை பரப்புரைக்கு பிரதமர் மோடி வந்தும், திராவிட மண்ணில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். பாஜக அரசு நினைப்பதை அவர்களாக சொல்வது இல்லை. குடியரசுத் தலைவர், சபாநாயகர் மூலமாக சொல்கின்றனர். பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோரை பாஜக அரசு ஒடுக்கப்பார்க்கிறது. எனது முன்னோர் வேலை தேடி இலங்கை சென்றனர். ஆனால் இன்று ராகுலுடன் அவையில் இருக்கிறேன். அதற்கு காரணம் பெரியார்.

ஒவ்வொருவரும் அவரவர் செய்துகொண்டிருக்கும் வேலையையே செய்ய வேண்டும் என பாஜக நினைக்கிறது. பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம். பாசிச கொள்கை கொண்ட பாஜக, எமர்ஜென்சி பற்றி பேச அருகதை இல்லை. லோக்சபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. 240 எம்.பிக்களை மட்டுமே பெற்றுள்ள பாஜகவுக்கு பெரும்பான்மை கிடையாது. பெரியார், திராவிட மண்ணில் பாசிச பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டினர். திராவிட கொள்கை ஏன் தேவை என்பதை பாஜக உணர வேண்டும், 

எமர்ஜென்சியை அமல்படுத்தியதற்காக பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார் இந்திரா காந்தி. இந்திரா காந்தி தெரிவித்த மன்னிப்பை மக்களும் ஏற்றுக் கொண்டுவிட்டனர்.  அதன்பிறகு மீண்டும் மக்கள் அவரை பிரதமராக்கினர். இந்துக்கள் அல்லாதவர்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் ஆகியோரை அரசு குறி வைக்கிறது. இது தான் பாசிசம், இது தான் இனவாதம். நீட் தேர்வில் நிலவும் பாகுபாட்டின் காரணமாக 20 உயிர்களை இழந்துள்ளோம்.” என்றார்.