நேரு ஜி போதைப்பொருள் உட்கொண்டார், மகாத்மா காந்தியின் மகனும் போதைப்பொருள் உட்கொண்டார்.. மத்திய அமைச்சர் பேச்சு

 
நேரு நேரு

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஜி போதைப்பொருள் உட்கொள்வார், சிகரெட் புகைப்பார். மகாத்மா காந்தியின் மகன் போதைப்பொருள் உட்கொண்டார் என்று மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான இணையமைச்சர் கவுஷல் கிஷோர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கவுஷல் கிஷோர் பேசுகையில்  கூறியதாவது: ஜவஹர்லால் நேரு ஜி போதைப்பொருள் உட்கொள்வார், சிகரெட் புகைப்பார். மகாத்மா காந்தியின் மகன் போதைப்பொருள் உட்கொண்டார். 

கவுஷல் கிஷோர்

நீங்கள் படித்தது பார்த்தால் தெரியும். நமது நாடு முழுவதும் போதைப்பொருளின் பிடியில் சிக்கியுள்ளது. போதைப்பொருள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் காரணமாக ஏற்படும் மரணங்கள் மற்றும் பிற மன, உடல்ரீதியான பிரச்சினைகள் குறித்து மக்களுக்கு தெரிவித்து,  போதைப்பொருளுக்கு எதிரான அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று ஊடகவியலாளர்களை கேட்டுக் கொள்கிறேன். 

இந்தியாவின் வட மாநிலங்களில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. நடிகைகள், நடிகர்கள் பலர் போதைப்பொருள் வழக்குகளில் சிக்குகின்றனர். அண்மையில் மும்பையில் சொகுசு கப்பலில் நடைபெற்ற போதை பார்ட்டியில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். 28நாட்கள் சிறை வாசத்திற்குப் பிறகு ஆர்யன் கானுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.  இச்சம்பவத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் கோடிக்கணக்கில் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மும்பையின் விலி பார்லி பகுதியில் போதைப் பொருள் பழக்கம் இருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  உடனடியாக அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் கோடிக்கணக்கில் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். போலீசார் வருவதை அறிந்து போதைப்பொருள் கும்பல் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளது. போதைப்பொருள் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் மதிப்பு எத்தனை கோடி என்பது தெரியவரவில்லை.

இது நடந்தால், விஷ விற்பனை நிறுத்தப்படுவது போல் போதைப்பொருள் விற்பனையும் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவையும், மகாத்மா காந்தியின் மகனையும் போதைப்பொருள் உட்கொள்வார் என்று மத்தியமைச்சர் கவுஷல் கிஷோர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.