ஜம்மு-காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

 
kashmir

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் இரண்டு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்த உடனேயே பாதுகாப்பு படை வீரர்கள் சோபார் பகுதியை சுற்றிவளைத்தனர். அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், பாதுகாப்பு படை வீரர்களை பார்த்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். நீண்ட நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு பயங்கரவாதி காயமடைந்தான். விசாரணையில், இந்த பயங்கரவாதிகள் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சோபார் பகுதியில் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனரா என பாதுகாப்பு படையினர் தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர்.