புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 10-ம் தேதி தொடக்கம்

 
pondy

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 10-ம் தேதி தேதி தொடங்கவிருப்பதாக சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதுச்சேரியில், 15-வது சட்டப்பேரவையின் 3-வது கூட்டத்தொடர், ஆகஸ்ட் 10-ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. காலை 9:30 துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் துவங்குகிறது. இதைத்தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்த முறை முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி, எத்தனை நாட்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடத்துவது என தீர்மானித்து முடிவு செய்து பின்னர் அறிவிக்கப்படும். 

pondy

சட்டப்பேரவைக்குள் பதாகைகள், முழக்கம் இடுவது போன்றவை தடை செய்யப்படுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் உறுதியளித்த திட்டங்கள் பெரும்பான்மையாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அனைத்து திட்டங்களும் 100% நிறைவேற்ற இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி உடனிருந்தார்.