71 ஆயிரம் பேருக்கு இன்று பணி நியமன கடிதம் வழங்குகிறார் பிரதமர் மோடி

 
p

மத்திய அரசின் வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று நடைபெறுகிறது .   இந்த கண்காட்சியில் 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.   காணொளி காட்சி மூலம் இந்த ஆணைகளை வழங்கும் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக உரையாற்றவும் இருக்கிறார்.

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்குமாறு அனைத்து மத்திய அரசு துறைகளையும் கேட்டுக் கொண்டார் பிரதமர் மோடி.  கடந்த ஜூன் மாதம் அவர்  கேட்டுக்கொண்டார்.  இதை அடுத்து கடந்த அக்டோபர் மாதம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார் பிரதமர் மோடி. 

a

 இதை அடுத்து இன்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்கள் வழங்குகிறார்.     71,000 பேருக்கும் காகித வடிவிலான பணி நியமன கடிதங்கள் நாடு முழுவதும் 45 இடங்களில் நேரடியாகவே வழங்கப்படுகின்றன .   புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆன்லைன் புத்தாக்க பயிற்சி திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் .

சட்டமன்றத் தேர்தல் நடப்பதால் குஜராத்,  இமாசலப் பிரதேசம் மாநிலங்களில் மட்டும் இந்நிகழ்ச்சி நடைபெறவில்லை . வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிப்பாட்டினை இது காட்டுகிறது என்று பிரதமர் அலுவலகம் கூறி இருக்கிறது.