11 குழந்தைகளுக்கு தேசிய விருது - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார்..

 
Draupadi Murmu 1


பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனை புரிந்த 11 குழந்தைகளுக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  நாளை தேசிய  விருது வழங்குகிறார்.

மத்திய அரசு குழந்தைகளின் சிறப்பான சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது. தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கும்  5-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி இந்த ஆண்டு, கலை மற்றும் கலாச்சாரத் துறையில் 4 விருதுகளும், துணிச்சல் மற்றும் சமூக சேவைக்கு தலா 1 விருதும், புதுமை பிரிவில் 2 விருதுகளும்,  விளையாட்டு துறையில் 3 விருதுகளும் என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.

மத்திய அரசு

இந்நிலையில்,  இந்த விருதினை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை வழங்க இருக்கிறார்.  இந்த விருது, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 6 சிறுவர்கள் மற்றும்  5 சிறுமிகள் பெறுகின்றனர். விருது பெறும் சிறுவர்கள் ஒவ்வொருவருக்கும்  பதக்கம், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதைதொடர்ந்து, விருது பெறும் சிறுவர், சிறுமிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வரும் செவ்வாய்க்கிழமை அன்று கலந்துரையாடி அவர்களை  வாழ்த்துவார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.