புதிய நாடாளுமன்ற கட்டிடங்களின் புகைப்படங்கள் வெளியீடு..

 
புதிய நாடாளுமன்ற கட்டிடங்களின் புகைப்படங்கள் வெளியீடு.. 

புதிய பாராளுமன்ற கட்டிடங்களின் புகைப்படங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  

புதிய நாடாளுமன்ற கட்டிடங்களின் புகைப்படங்கள் வெளியீடு.. 

 இந்தியாவின் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.  ஆகையால் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்த மத்திய அரசு ,  ராஜபாதை சீரமைப்பு , துணை  குடியரசுத் தலைவர் இல்லம், பிரதமர் இல்லம், மத்திய செயலகம் உள்ளிட்டவை அடங்கிய அடங்கிய புதிய பாராளுமன்ற கட்டிடத்தைக் கட்டி வருகிறது. சென்டிரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக  கட்டப்பட்டு வரும், இதற்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடங்களின் புகைப்படங்கள் வெளியீடு.. 

இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிடம், வருகிற மார்ச் மாதம் திறக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்டுமான பணி முழு வேகத்தில் நடந்து வரும் நிலையில், பிப்ரவரி மாதத்துக்குள் முழுமையாக  முடிவடைந்து மார்ச் மாதம் திறக்கப்படும் என கூறப்படுகிறது. 

புதிய நாடாளுமன்ற கட்டிடங்களின் புகைப்படங்கள் வெளியீடு.. 

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி, புதிய கட்டிடத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய கட்டிடத்தில், இந்தியாவின் ஜனநாயக பெருமையை பறைசாற்றும் பிரமாண்டமான அரசியல் சட்ட மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.  

புதிய நாடாளுமன்ற கட்டிடங்களின் புகைப்படங்கள் வெளியீடு.. 

அத்துடன், எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் அறை, நூலகம், நிலைக்குழுக்களுக்கான அறைகள், உணவு அருந்தும் பகுதி, விசாலமான வாகன நிறுத்தும் பகுதி ஆகியவை இடம்பெற்றுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. இந்நிலையில், மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் படங்கள் மற்றும் வரைபடங்கள் தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.