நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என தகவல்..

 
rahul

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்க உள்ள நிலையில்,  இந்த கூட்ட தொடரில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம்

இந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை  வரும் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை  வரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழு பரிசீரித்து வருகிறது.   சுமார் 1700 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில்,  குளிர்கால கூட்டத் தொடர் புதிய கட்டிடத்தில் நடத்தப்படும் என்று கூறப்பட்டது.   ஆனால் கட்டடப்பணிகள் நிறைவடையாததால் இந்த ஆண்டு பழைய கட்டிடத்திலேயே குளிர்கால கூட்டத்தொடர் நடத்த உள்ளதாக தெரிகிறது.  இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகுல் காந்தி பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என தகவல்..

 ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா என்னும், இந்திய ஒற்றுமைக்கான  நடை பயணம் மேற்கொண்டு உள்ளதால் இந்த கூட்டத்தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.   பொதுவாக குளிர்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும்.   இந்த ஆண்டு குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேச தேர்தல் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர்  நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது..