கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்..
பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
முதலில் கர்நாடகா மாநிலம் யாத்கிரி மாவட்டத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு ஜல் ஜீவன் இயக்கத்தின்கீழ் பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன் குடிநீர், பாசனம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைக்க இருக்கிறார். தொடர்ந்து கலபுரகி மாவட்டத்திற்கு செல்லும் பிரதமர், அங்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் கர்நாடக பயணத்தை முடித்துக் கொண்டு, மகாராஷ்டிரா மாநிலத்திற்குச் செல்லும் பிரதமர் மோடி அங்கு ரூ. 38,800 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைக்கிறார். மேலும், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டும் அவர், மாலையில் மும்பை புறப்பட்டுச் சென்று அங்கு பல்முனை வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவதோடு, முடிவுற்ற திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மும்பை மெட்ரோ நிர்வாகத்தால் இரண்டு வழி ரெயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்து, மெட்ரோ ரயிலில் பயணிக்க இருக்கிறார்..