75வது சுதந்திர தினம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோள்!!
ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுதோறும் மூவர்ண கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் 25 ஆவது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே 75வது சுதந்திர தினத்தை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றனர். அந்த வகையில் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்திய அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
அதன்படி ஹர் ஹார் ட்ரையாங்கா என்ற பெயரில் ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கும் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
This year, when we are marking Azadi Ka Amrit Mahotsav, let us strengthen the Har Ghar Tiranga Movement. Hoist the Tricolour or display it in your homes between 13th and 15th August. This movement will deepen our connect with the national flag. https://t.co/w36PqW4YV3
— Narendra Modi (@narendramodi) July 22, 2022
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஆண்டு நாம் அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஒவ்வொரு வீடுகளிலும் தேசிய கொடி இயக்கம் மூலம் மேலும் வலுப்படுத்துவோம். ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை உங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுங்கள் .இந்த இயக்கம் தேசிய கொடியுடன் நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.