நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவிற்கு இந்தியா துணை நிற்கும் - பிரதமர் மோடி

 
PM Modi

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  சியாஞ்சூர் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.6  ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில், மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி  பலியானோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  நிலநடுக்கத்தில் 2200 வீடுகள் சேதமடைந்துள்ளன. 5300 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 13,000 பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

earthquake

இந்தநிலையில் இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் - காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேசியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.