டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை - மொத்த பாதிப்பு 9 ஆக உயர்வு

 
monkeypox

டெல்லியில் வசித்து வரும் நைஜீரிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. . 

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் குரங்கம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவையும் அந்த நோய் விட்டு வைக்கவில்லை. டெல்லியில் ஏற்கனவே இரண்டு நைஜீரிய நாட்டவர் உட்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் ஒரு நைஜீரிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 31 வயது பெண்மணிக்கு இந்த குரங்கம்மை பாதிப்பானது ஏற்பட்டுள்ளது. நாட்டில் குரங்கம்மை பாதிப்புக்கு ஆளான முதல் பெண் இவரே ஆவார். 

இதனால் நாட்டில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் 4 பேருக்கும், தெலங்கானாவில் ஒருவருக்கும் குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.