திருப்பதியில் புகைப்பட கலைஞர்களின் கேமராக்களை பறித்து உண்டியலில் செலுத்திய அதிகாரிகள்

 
tirupati undiyal

திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே பக்தர்களுக்கு இடையூறாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த உள்ளூர் புகைப்பட கலைஞர்களின்  கேமராக்களை பறித்து உண்டியலில் செலுத்திய தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

Tirupati - Wikipedia

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தா நினைவாக தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து செல்வது வழக்கம். ஒரு சிலர் அங்கு உள்ள புகைப்பட கலைஞர்கள் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டு போட்டோ பிரேம் போட்டு கொண்டு செல்வது வழக்கம். இதற்காக உள்ளூர் புகைப்பட கலைஞர்கள் பலர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்காக தேவஸ்தானம் சார்பில் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது ஆனால் லைசன்ஸ் அனுமதி இல்லாமல் அதிக அளவில் புகைப்பட கலைஞர்கள் பக்தர்களுக்கு இடையூறாக செயல்பட்டு புகைப்படங்கள் எடுக்க வலியுறுத்தி தொல்லை கொடுத்து வருவதாக பக்தர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனால் கோயில் முன்பு அனுமதியற்ற புகைப்படக்காரர்களிடம் இருந்த கேமராக்களை தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட  கேமிராக்களை கோயில் உண்டியில் செலுத்தினர்.  இதனால் இந்த கேமராக்கள் அனைத்தும் தேவஸ்தானம் சார்பில் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு அந்த தொகையை தேவஸ்தான கணக்கில் செலுத்தப்படும்.

இந்த நடவடிக்கை தொடரும் என்பதால் அனுமதியில்லாமல் கேமிரா வைத்து கொண்டு போட்டோ எடுப்பதாக பக்தர்களுக்கு தொல்லை கொடுத்தால்  இதேபோன்று தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.